Friday, September 16, 2005

எனது புதிய நாட்குறிப்பு

மனசு செல்லும் பாதையும் வேகமும் கணக்கிடமுடியாதவை. நம் மனதை நாமே ஆராய்ந்து பார்க்கையில், யாருடனும் பகிர்ந்துகொள்ள இயலாத பல ஆச்சர்யங்கள் காணக்கிடைக்கலாம். அவை மற்றவருக்கும் தோன்றக்கூடியவை தாம். எனினும் அவை, யாரும் யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பாதவை. பகிர்ந்து கொண்டால் நம்மைப்பற்றிய தவறான மதிப்பீடுகளை உருவாக்கிவிடுமோ என மனக்கிடங்கில் பூட்டி வைக்கப்படுபவை.

மனதின் போக்கிற்கு எந்த இலக்கணமுமில்லை. எதற்கு சிரிக்கும், எதற்கு அழும், எதற்கு கோபப்படும் என எந்த விதிகளுமில்லை. அதன் லீலைகள் மிக இரசிக்கத்தக்கவை.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும், யாரிடமும் சொல்லப்படாத, வாழ்நாள் முழுதும் சொல்லவே முடியாத சில செய்திகள் நிச்சயமாய் இருக்கின்றன - என்பதை யாரவது மறுக்க முடியுமா? அவை மிகச்சிறிய விஷயங்களாகக்கூட இருக்கலாம். வெளியில் சொல்ல நம் மனது விரும்புவதில்லை. மனதின் விருப்பு வெறுப்புகள் சரி மற்றும் தவறுகளுக்கு அப்பார்ப்பட்டவை.

ஒரு நாள். ஒரே ஒரு நாள். உங்கள் மனதில் தோன்றும் அனைத்தையும் யாரிடமாவது பகிர்ந்துகொள்ள முயற்சியுங்கள். எச்சரிக்கை! அது உங்கள் வாழ்வையே கூட கலைத்துப்போட்டுவிடக்கூடும்! !

வயது ஏற ஏற... இப்படி சொல்லமுடியாத விஷயங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனதால், நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தையே விடவேண்டியதாகிவிட்டது.

இப்படிப்பட்ட எண்ணங்களை - என்னுடனும், உங்களுடனும் பகிர்ந்துகொள்ள இந்த பதிவை பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன். இந்த வலைப்பதிவு, சிலவருடங்களுக்குப்பிறகு தொடரப்படுகிற என் நாட்குறிப்பு. என் மனதை பாதித்த, குட்டி குட்டி விஷயங்களைக்கூட இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன். எல்லாவற்றையும் சொல்லாவிட்டாலும் பெரும்பாலான விஷயங்களை சொல்கிறேன். அவை உங்கள் மனதுடன் ஒத்துப்போகின்றனவா என பாருங்கள் :)

7 comments:

குழலி / Kuzhali said...

உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள், மனப்பத்தாயம் என்ற கவிஞர் யுகபாரதியின் கவிதை தொகுப்பு நல்லதொரு கவிதை தொகுப்பு, உங்கள் பதிவின் தலைப்பு அதை ஞாபகப்படுத்தியது.

நன்றி

மனசு said...

நன்றி குழலி.
யுகபாரதி அவர்களின் தொகுப்பை தேடி படிக்க முயற்சிக்கிறேன்.

Anonymous said...

A monthly called "Vedanta Kesari" attracted my attention in which I saw a letter dated 5th december 1927, written by Mr.Romain Rolland to Sigmund Freaud,stating that he was longing for an eternal rest and survival didnot attract him and some philosophical musings. By all these I mean that ever since the dawn of civilization, man always wanted to share his innermost longings and aspirations. I welcome your novel idea in the tamil community. I personally felt that a few of our generation (I'm 42 ) has touched the philosophical extremities already and feels dry and exhausted by both material and spiritual quests and pursuits.

ILA (a) இளா said...

நல்ல அறிமுகம், வாருங்கள். வாழ்த்துக்கள்

மனசு said...

நன்றி இளா.

Anonymous said...

your 'manapathayam' hits the heart that, it is the truth that all will have hided matters in their own mind. In the first visit itself the page made me to see it often. Wishes for u and keep on continue.

Unknown said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி